Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாட வந்த 76 பேர் கைது
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாட வந்த 76 பேர் கைது

பதிவு செய்த நாள்

01 மார்
2022
12:03

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட வந்த தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த 76 பேரை, போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், பெண் பக்தரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யவும், சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரியும், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், நடராஜர் கோவில் சிற்றம்பலத்தில், தொடர்ந்து ஆறு நாட்கள் தேவாரம் பாடி வழிபடப் போவதாக, தெய்வத் தமிழ் பேரவை அறிவித்தது. நேற்று காலை செயலர் வெங்கட்ராமன், ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தேனி மாவட்டம் ராஜயோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி குச்சனுார் கிழார் தலைமையில் 17 பெண்கள் உட்பட, 76 பேர் சிதம்பரம் கீழ வீதிக்கு வந்தனர். கடலுார் ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி.,க்கள் ரமேஷ்ராஜ், ஆரோக்கியராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், கீழ வீதி வாயிலில் இரும்பு தடுப்பால் தடுத்தனர்.இதையடுத்து, சாலையில் அமர்ந்து தேவாரம், திருவாசகம் பாடினர். ஒரு மணி நேரத்திற்கு பின் 76 பேரை போலீசார் கைது செய்தனர். வேனில் ஏற மறுத்த சிலரை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அங்கு பரபரப்பு நிலவியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar