திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், ஜவ்வாது, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. மாலை 6 மணிக்கு மங்களாம்பிகை, கிருபாபுரீஸ்வரர் தம்பதி சமேதராக அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.