Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சி மகா பெரியவருக்கு ... கோவில் மண்டபத்தை இடிக்க உத்தரவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிற உயிரினங்களையும் தன்னுயிராக கருதியவர் மஹாபெரியவர்; இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2022
12:03

மதுரை : பிற உயிரினங்களையும் தன்னுயிராக கருதியவர் மஹாபெரியவர் என இந்திரா செளந்தர்ராஜன் பேசினார்.மதுரை ஸ்ரீகாஞ்சி காமகோடி மடத்தில் மஹா பெரியவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ வைபவம் நேற்று நடந்தது. ஸ்ரீ மஹாபெரியவா விக்ரகத்திற்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன.குருமஹிமை எனும் தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசியதாவது:மஹாபெரியவர் தலைசிறந்த சன்னியாசியாகவும், வேதங்களை காத்திடும் மடாதிபதியாகவும் உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

அத்வைதியாக இருந்தபோதிலும், வைணவர்கள், பிறமதத்தவர்களும் அவர்பால் பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தனர்.ஒரு ஊரில் அவர் முகாமிட்டிருந்தபோது நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டது. சீடர்களிடம் ஏன் என கேட்டதும், மடத்தில் இருந்து வெளியே போட்ட எச்சில் இலைகளுக்காக அவை சண்டையிட்டுக்கொள்கின்றன என்றனர்.நாளை முதல் அவற்றிற்கு உணவு அளித்துவிட்டு பிறகே நாம் சாப்பிட வேண்டும். அவை மனிதர்களை நம்பியே உள்ளன. அவற்றிற்கு ஆகார பங்கம் கூடாது என்றார். மறுநாள் குரைப்புச் சப்தம் கேட்கவில்லை. அவை பசியாறி விட்டது தெரிந்தது. இப்படி பிற உயிரினங்களையும் தன்னுயிர் போல கருதியவர் பெரியவர். இன்றும் அவர் சூட்சம வடிவில் நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார். இவ்வாறு இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்ரமணியம், செயலாளர் சுந்தர், பொருளாளர் ஸ்ரீ குமார், சுப்பிரமணியன், வெங்கட ரமணி, வெங்கடேசன், சீனிவாசன், ராதாகிருஷ்ணன், ஸ்ரீராம், சந்திரன், ஜோதி வேல், சங்கரராமன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar