Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை உத்தரவு பெட்டியில் போகர் ... ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்பொழி திருமலை கோயிலுக்கு ரூ. 40 லட்சத்தில் 2 மினி பஸ்கள்
எழுத்தின் அளவு:
பண்பொழி திருமலை கோயிலுக்கு ரூ. 40 லட்சத்தில் 2 மினி பஸ்கள்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2022
08:04

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைகுமாரசாமி கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து மலை மீது பயணிக்க பக்தர்கள் வசதிக்காக ரூ. 40 லட்சம் மதிப்பில் 2 மினி பஸ்கள் வழங்கப்பட்டன.

இங்கு 400 அடி உயர மலை மீது அமைந்துள்ள திருமலை குமாரசுவாமி கோயிலில் முருகப் பெருமான் பாலமுருகனாக அருள்புரிகிறார். அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாகும். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் கடையநல்லூர் அருணாசலத்தின் முயற்சியால் கோயிலில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்துள்ளது. முன்பு மலைக்கோயிலுக்கு 544 படிக்கட்டுகள் வழியாக செல்ல முடியும்.2011ல் மலை மீதுள்ள கோயிலுக்கு அறநிலையத்துறை பங்களிப்புடன் வாகனங்கள் செல்லும் வகையில் 2.2 கி.மீ., தூரம் மலைப்பாதை அமைக்கப்பட்டது. இக்கோயிலில் தங்கத்தேர், ராஜகோபுரம் போன்றவையும் அருணாசலம் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் முயற்சியில் உருவாகின. மலைக்கோயிலுக்கு தனியார் வாகனத்தில் அழைத்து செல்ல ஒருவருக்கு ரூ.50 வரை வசூலிக்கப்பட்டது. தற்போது அடிவாரத்தில் இருந்து மலை மீது பக்தர்கள் இலவசமாக செல்ல ரூ 40 லட்சம் மதிப்பில் இரண்டு மினி பஸ்களை அருணாசலம் வழங்கியுள்ளார்.

மினி பஸ்கள் வழங்கும் விழாவில் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் ஜெ.குமரகுருபரன், இணை கமிஷனர் அன்புமணி, கலெக்டர் கோபாலசுந்தரராஜ், எம்.எல்.ஏ.,க்கள் சதன் திருமலைக்குமார், பழனி நாடார், நன்கொடையாளர் அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டு பஸ்களுக்கான டிரைவர் சம்பளம், பராமரிப்பு வைப்புத்தொகையும் நன்கொடையாளர் தரப்பில் வழங்கப்பட்டது. பயணிகள் ஒரு முறை பயணிக்க ரூ 10 கட்டணம் என நிர்ணயிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar