பதிவு செய்த நாள்
13
ஏப்
2022
04:04
கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை ஒட்டி, கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் மற்றும் குமரகுருபார சுவாமிகள் நல்லாசியுடன், காரியங்கள் தடையின்றி நடைபெற, காலை, 6:00 மணிக்கு, கணபதி வேள்வியை தொடர்ந்து, காப்பு கட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் மலர் அலங்காரம் வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரும், மே மாதம், 3ம் தேதிவரை நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, உபயதாரர்களின் பங்களிப்பில் தேர் திருவீதி உலா மற்றும் அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.