Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.8 ... நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா: 1008 சங்காபிஷேகம் நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தேவ் கோவில் விழா: நர்மதை ஆற்றில் கொட்டப்பட்ட 11,000 லிட்டர் பால்
எழுத்தின் அளவு:
சத்தேவ் கோவில் விழா: நர்மதை ஆற்றில் கொட்டப்பட்ட 11,000 லிட்டர் பால்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2026
10:04

செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் சத்தேவ் பகுதியில் உள்ள கோவிலில், 21 நாட்கள் திருவிழா நடைபெற்றது..


இதன் நிறைவு நாளான நேற்று முன்தினம் ஆற்றின் துாய்மை, யாத்ரீகர்களின் நல்வாழ்வு, செழிப்பு ஆகியவற்றை வேண்டி, டேங்கர்கள் மூலம் நதிக்கரைக்கு கொண்டு வரப்பட்ட 11,000 லிட்டர் பால், பக்தர்கள் முன்னிலையில் மந்திரங்கள் முழங்க, நர்மதை ஆற்றில் கொட்டப்பட்டது. இதுதொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நம் நாட்டில் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் ஏராளமானோர் உள்ள நிலையில், பல லிட்டர் பால் வீணாக ஆற்றில் கொட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டினர். இதை தொடர்ந்து விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘மத சடங்குகளின் ஒரு பகுதியாகவே 11,000 லிட்டர் பால் நதிக்கு அர்ப்பணிக்கப்பட்டது’ என்றனர். எனினும், இது சுற்றுச்சூழலை குறிப்பாக நீர்வாழ் உயிரினங்களை பெரிதும் பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான சுபாஷ் பாண்டே கூறுகையில், “பாலில் உள்ள கொழுப்பு மற்றும் புரதங்கள் பாக்ட்ரீயாக்களால் சிதைக்கப்படும் போது, நீரில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கும். “இது, மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள், கால்நடைகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதுதவிர, குடிநீருக்காக நர்மதை ஆற்றை சார்ந்திருக்கும் மக்களும் பாதிக்கப்படுவர்,” என்றார். நர்மதை ஆறு, அமர்கண்டக் பகுதியில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி 1,312 கி.மீ., பயணித்து மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை கடந்து, காம்பே வளைகுடா வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. இதன்மூலம் மூன்று மாநிலங்களின் பாசனத்திற்கு தேவையான நீரை வழங்கும் முக்கிய ஆதாரமாகவும் இது திகழ்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar