குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தீச்சட்டி ஊர்வலத்தில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2026 10:04
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக சித்தி விநாயகர் கோவில் தெரு, பொதுமக்கள் சார்பில் கரக ஊர்வலம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று சித்தி விநாயகர் கோவில் தெரு, பொதுமக்கள் சார்பில் கரக உற்சவம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. விழாவில் பக்தர்கள் பலரும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சித்தி விநாயகர் கோவில், தீயணைப்பு நிலைய கோவிலில் துவங்கிய இந்த ஊர்வலம் எம்ஜிஆர் நகர் கிருஷ்ணாபுரம் மவுண்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் யோகபைரவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் நேற்று சித்தி விநாயகர் கோவில் தெரு பொதுமக்கள் சார்பில் கரக உற்சவம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது.