மானாமதுரையில் சுவாமி திருக்கல்யாணத்திற்கு அழைப்பிதழ் அச்சடித்து விநியோகித்து வரும் பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2022 10:04
மானாமதுரை : மானாமதுரையில் நாளை நடைபெறும் ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதர் சுவாமி திருக்கல்யாணத்திற்காக பக்தர் ஒருவர் அழைப்பிதழ் விநியோகித்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் கடந்த 7ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை காலை 11: மணியிலிருந்து 11 30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையடுத்து மானாமதுரையைச் சேர்ந்த ஜோதி புட்ஸ் நிர்வாக இயக்குனர் தேவராஜன் என்ற பக்தர், ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதர் திருக்கல்யாணத்திற்கு சுவாமிகளின் பெயர்களோடு திருமண நேரம் மற்றும் நடைபெறும் இடம் ஆகியவை அடங்கிய அழைப்பிதழ் அச்சடித்து சுவாமிகளின் திருக்கல்யாணத்திற்கு வருகை தரும்படியும்,திருக்கல்யாண விருந்தில் கலந்து கொள்ள வேண்டியும் ஏராளமான பக்தர்களுக்கு அழைப்பிதழ்களை நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் அனுப்பி வருகிறார்.மானாமதுரையில் சுவாமிகளின் திருக்கல்யாணத்திற்கு அழைப்பிதழ் அச்சடித்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வது ஏராளமான பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.