சித்திரை திருநாள் கோவில்களில் கோலாகலம்: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 10:04
கோவை: சித்திரை திரு நாளாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் விதமாக கோவையில் உள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வெகு விமர்சையாக நடந்து வருகின்றன.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர், பல்லடம் ரோடு வாய்கால் தோட்டம் ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுபகிருது தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு, திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்பு உள்ள, வழிவிடும் முருகன் கோவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசாமி, வெள்ளி கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.