Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ்ப்புத்தாண்டு : பிள்ளையார்பட்டி ... சித்திரை திருநாள் கோவில்களில் கோலாகலம்: பக்தர்கள் வழிபாடு சித்திரை திருநாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
09:04

ஓசூர்: தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி மற்றும் கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில் தேரோட்டத்தில், மூன்று மாநில பக்தர்கள்பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பழமையான சவுந்தர்யவள்ளி உடனுறை பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் ஏப்.,ல் நடக்கும். கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக தேரோட்டம் நடக்கவில்லை. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம், 27ல் பால்கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை, 10:20 மணிக்கு நடந்தது. கிருஷ்ணகிரி காங்.,–எம்.பி., செல்லக்குமார், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், தாசில்தார் குருநாதன், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேர் வடம் பிடித்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள், தேர் மீது உப்பு, மிளகு, வாழைப்பழம் ஆகியவற்றை வீசி, சுவாமி தரிசனம் செய்தனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., கிருத்திகா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணியம் உட்பட, 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று காலை நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாக சென்றது. விழாவையொட்டி, ஸ்ரீவாரி அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து நடந்த பல்லக்கு மற்றும் வசந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவச்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar