சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்களாக நடந்து வருகிறது . தினமும் காலை மற்றும் இரவு வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. 3 நாட்களுக்கு முன் பொங்கல் விழா நடந்தது. நேற்று முன்தினம் கயர்குத்து விழா நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.