திரௌபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா: சுவாமிக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2022 03:04
உளுந்தூர்பேட்டை: சேந்தநாடு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தநாடு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதனை ஒட்டி நேற்று மாலை 5 மணியளவில் மகாசூரனுக்கு அன்னமிடுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்றுகாலை 9 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் தீபாரதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். வரும் 21ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை 6 மணிக்கு பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் முரளி, வெங்கடேசன் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.