Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ... பழநி மலைக்கோயில் ரோப்கார் சேவை பராமரிப்பு பணிக்காக நிறுத்தம் பழநி மலைக்கோயில் ரோப்கார் சேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கம்பாளையத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ரங்கம்பாளையத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 மே
2022
05:05

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே புதிதாக கட்டிய லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

சிறுமுகை ரங்கம்பாளையம் சின்னகள்ளிபட்டி ஊராட்சி சங்கம் பாளையத்தில் கணேசபுரத்தில் யோக வள்ளி தாயார் சமேதராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் புதிதாக கட்டப்பட்டது. கோவிலில் ஐந்து கலசங்கள் கொண்ட கஜபிருஷ்ட கோபுரம் அமைக்கப்பட்டது. கோவிலில் லட்சுமி நாராயணன், லட்சுமி வராகர், லட்சுமி ஹயக்ரீவர், யோகநரசிம்மர் சந்தானகிருஷ்ணன் ஆகிய விக்கிரகங்களும், விஷ்வக்சேனர் கருடாழ்வார், துவாரபாலகர்கள், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகா மண்டபத்தில் ஐந்தடி உயரம் கொண்ட பன்னிரு ஆழ்வார்களின் விக்கிரங்கள், அஷ்டதிக் பலிபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலில் திவ்ய தேச வேத விற்பன்னர்களை கொண்டு, பாஞ்சராத்திர ஆகம விதிமுறைப்படி கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. விழாவில் காரமடை வெங்கடேஷ் பிரசாத் தலைமையில், ஸ்ரீரங்கம் கேசவரமண ஐயங்கார், பார்த்திபன் ஐயங்கார், சேஷாத்திரி ஐயங்கார், திருவேங்கடம் ஐயங்கார், காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் யாக வேள்விகளை நடத்தினர். இன்று காலை, 7:00 மணியளவில் தீர்த்த குடங்களை யாகசாலையில் இருந்து, வேள்வியில் நடத்திய ஐயங்கார்கள், கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு கோபுர கலசத்திற்கும், மூலவருக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கோவில் ஸ்தாபகர் கிருஷ்ணன் பட்டாச்சாரியார், கோவில் தலைமை அர்ச்சகர் ரங்கப்பிரியன்ஐயங்கார், டிரஸ்ட் நிர்வாகிகள் வைஜயந்தி, கல்யாணி விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் உபயதாரர்கள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகளை முத்துகிருஷ்ணன் நேர்முக வர்ணனை செய்தார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நாட்டிய நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 
temple news
நத்தம்: சிவன் கோயில்களில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar