Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை சுப்பிரமணியர்க்கு 300 குட ... கரிவலம் கோயிலில் 2ம் தேதி பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2012
11:07

வள்ளியூர்: தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்தில் 127ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறைமாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டு 127வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் திருப்பலியும், திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலை 5 மணிக்கு புதிய தேரை பங்குதந்தை அந்தோணிதாஸ் அடிகளார் அர்ச்சிக்க, பின் கோயிலை சுற்றி தேர்பவனி நடந்தது. மாலை 6.50 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இல்ல குருவானவர் சத்தியநேஷன் தலைமையில் குருக்கள் ஜெபித்து மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அர்ச்சித்தனர். பின்னர் கோயில் தர்மகர்த்தாவும், தெற்கு கள்ளிகுளம் பஞ்.,தலைவருமான ஆனந்தராஜா கொடிமரத்தில் மாதாவின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது உலகத்தில் சமாதானம் உண்டாவதற்காக சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நாளான 8ம் நாளான வரும் 3ம் தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 9ம் திருவிழாவான 4ம் தேதி இரவு கோட்டார் மறைமாவட்ட ஆயர் ரெமிஜூஸ் தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா தேரில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, பாதுகாப்பு, குடிநீர், தங்குமிட வசதி கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அந்தோணிதாஸ் அடிகளார், உதவி பங்குதந்தை குழந்தைராஜன், கோயில் தர்மகர்த்தா ஆனந்தராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்கத்தினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar