காரைக்காலில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பூச்சொறிதல் காப்புகட்டும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2022 04:05
காரைக்கால்: காரைக்கால் மேலகாசாகுடி கிராமத்தில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பூச்சொறிதல் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் மேலகாசாகுடி கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி, வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு நேற்று மல்லிகேஸ்வரி மாரியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில்களில் பூச்சொறிதல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மல்லிகேஸ்வரி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. வரும் 23ம் தேதி தீமிதி உற்சவம் நடைபெறுகிறது .24ம் தேதி பத்திரகாளியம்மனுக்கு கும்ப பூஜை, அக்னி கப்பறை, காளியம்மன் வீதியுலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கெளரவ ஆலோசகர் ராஜகுரு, அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், உபதலைவர் சாமிநாதன், ரவி,விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.