Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தருமபுரம் ஆதீனத்தில் பட்டின ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 மே
2022
09:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவத்தில் நேற்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் மூன்றாம் நாள் கருடசேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஏழாம் நாள் உற்சவமான தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 3:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோவிலில் இருந்து புறப்பட்டார். 3:45 மணிக்கு தேரில் பெருமாள் எழுந்தருளினார். பின் பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது. காலை 5:55 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் செல்லும் வழிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தேர் திருவிழாவை காண அதிகாலையில் இருந்து பக்தர்கள் திரண்டனர். மக்கள் போக்கு வரத்துக்கு வசதியாக நகருக்கு வெளியில் தற்காலிக பேருந்துநிறுத்தம் அமைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் அனைத்து வழிகளிலும் வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டது.


தேர் திருவிழாவை காணவந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் ராஜவீதியை சுற்றி இரட்டை மண்டபம் திரும்பி வரும் போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாககாணப்பட்டது. காலை 11:30 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. தேரில் எழுந்தருளியுள்ள பெருமாளைபொது மக்கள் தரிசனத்திற்கு மாலை வரை அனுமதி வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு தேரில் இருந்து பெருமாள் இறங்கினார். அந்தப குதியில் மூன்று இடங்களில் பெருமாளுக்குமண்டப்படி நடந்தது. இதில், சாமிநாயக்கன் தோட்டம் மண்டபத்தில் எழுந்தருளிய வரதர் தேவியர்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலை செ ன்று அடைந்தார். 4 குழந்தைகள் மீட்பு தேரோட்டத்தின் போது பக்தர்களின் கூட்டத்தில் பரிதவித்த, நான்கு குழந்தைகள் போலீசாரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar