Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ஹனுமனுக்கு ... வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு புதிய கதவுகள் வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பண்டிகை துவக்கம்
எழுத்தின் அளவு:
வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பண்டிகை துவக்கம்

பதிவு செய்த நாள்

26 மே
2022
08:05

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி மகாமாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பண்டிகை துவக்க விழா நடந்தது.

வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம், 15 நாட்கள் பூச்சாட்டு திருவிழா நடக்கும். விழாவில், வீரபாண்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். முதல்நாள் நிகழ்வான பூச்சாட்டு விழா கோயில் வளாகத்தில் நடந்தது. மாரியம்மனுக்கு பன்னீரு வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், பூச்சாட்டு நடந்தது. தொடர்ந்து, கம்பம் நடுதல், நகை சீர் கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய நிகழ்வான பண்டிகை ஜூன், 8ம் தேதி நடக்கிறது. அப்போது சக்திகரகம் அழைத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, ஊர்வலங்கள் நடக்கின்றன. பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் பண்டிகையும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இங்கு ஜூன், 8ம் தேதி பண்டிகை நடக்கிறது.

இதேபோல, கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவும் பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து, 15 நாட்கள் அக்னிச்சட்டி யுடன் கம்பம் சுற்றி ஆடுதல் நடக்கிறது. நாயக்கன்பாளையம், புதுப்புதூர் கிராமங்களில் இருந்து நகை சீர் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜூன், 5ல் மகா மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், 7ம் தேதி மாவிளக்கு ஊர்வலமும், எட்டாம் தேதி எருது பிடித்தல் நிகழ்ச்சியும், 9ம் தேதி மஞ்சள் நீராட்டும், நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar