Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான வளரி ஆயுதத்துடன் நடுகல் மகா மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி மகா மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சொத்தை விரைவில் மீட்க வேண்டும்!
எழுத்தின் அளவு:
கோவில் சொத்தை விரைவில் மீட்க வேண்டும்!

பதிவு செய்த நாள்

31 மே
2022
06:05

வெ.சங்கரராம அய்யர், புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்: சென்னை சவுகார்பேட்டை, வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 137 ஏக்கர் நிலத்தை, உடனடியாக ஹிந்து சமய அறநிலையத் துறை மீட்க வேண்டும் என, இம்மாதம், 25ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த நிலத்தை எல்லாம் வீட்டுமனைகளாக பிரித்து விட்டனர்.

என்ன அநியாயம்... கோவில் சொத்து, பக்தர்கள், பொதுமக்கள் சொத்து என்ற எண்ணமே இல்லையா? இந்த, 137 ஏக்கர் நிலமும், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானுாரில் உள்ளது. இங்கு ஒரு ஏக்கர் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 5 லட்சம் ரூபாய். அதன்படி பார்த்தால், 137 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 6.85 கோடி ரூபாய். இந்த நிலத்தை விற்று, கோவில் பெயரில் வங்கியில் டிபாசிட் செய்திருந்தால், 6 சதவீத வட்டி என்றாலும், மாதம், 3.42 லட்சம் வீதம், ஒரு ஆண்டுக்கு, 41 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இன்றைய தேதியில் மாதம், 3.42 லட்சம் ரூபாய் வருமானம் வரக்கூடிய அளவிலான நிலத்தை, ஒரு புண்ணிய ஆத்மா, பல ஆண்டுகளுக்கு முன்ன தாக, வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு எழுதி வைத்துள்ளது. பெருமாள் மீதான பக்தியாலும், மக்களுக்கு பசிப்பிணி போக்கவும், பக்தி தழைத்தோங்கவும், மகத்தான இந்த நற்செயலை அந்த நபர் செய்துள்ளார். ஆனால், அவ்வளவு நிலத்தை, கொடூர நெஞ்சம் உடையவர்கள் அபகரித்து, வீட்டு மனைகளாக மாற்றி விட்டனர் என்பதை கேட்கும் போது, நெஞ்சு பதை பதைக்கிறது.

இந்த நிலத்தின் வாயிலாக, மாதம், 3.42 லட்சம் ரூபாய் வருமானம் ஒழுங்காக வர ஏற்பாடு செய்திருந்தால், கோவிலில் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கும்; கோவில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் நல்ல சம்பளம் பெற்றிருப்பர். கோவில் சொத்து தெய்வத்திற்கு உரிமையானது. அதை அபகரித்து, சுயநலத்துக்கு பயன்படுத்துவது, சமுதாயத்தின் வாயில் மண்ணை அள்ளி போடுவதற்கும் சமம். விரைவில், அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு, உருப்படியான வழியில் அதை பயன்படுத்தி, கோவிலுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar