Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ... கோவில் சொத்தை விரைவில் மீட்க வேண்டும்! கோவில் சொத்தை விரைவில் மீட்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான வளரி ஆயுதத்துடன் நடுகல்
எழுத்தின் அளவு:
பழமையான வளரி ஆயுதத்துடன் நடுகல்

பதிவு செய்த நாள்

31 மே
2022
05:05

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பழமையான வளரி ஆயுதத்துடன் மேலும் ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரத்தில் உள்ளது கள்ளபட்டி. கிராமத்திற்கு வடக்கே விநாயகர் கோவில் அருகே மக்களால் பட்ட வினையன் என்றழைக்கப்படும் நடுகல் பழமையான தமிழர்களின் ஆயுதமான வளரியுடன் காணப்படுகிறது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், வரலாற்று ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் கூறியதாவது: பட்ட வினையன் என்பது ஏதாவது ஒரு வினையால் மாண்டு பட்டவன் என்று பொருள். சுமார் 3.5 அடி உயரத்தில் 2.8 அடி அகலத்தில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தலை உச்சியில் ஒரு பக்க கொண்டை, கழுத்தணிகள் அணிந்தும், இடுப்பில் இருந்து முழங்கால் வரை இடைகச்சு ஆடையும் அணிந்தும் காணப்படுகின்றார். அவரது இடது கையில் வேலும், வலது கையில் வளரி என்ற வளரித்தடியை வைத்துள்ளார். இச்சிலை அமைப்பின் மூலம் இது சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது எனலாம். ஆங்கிலேயர் ஆட்சியின் போது தடை செய்யப்பட்ட வளரி என்ற தொன்மையான ஆயுதம் இப்பகுதியில் வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு ஆதாரமாக கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள பட்டவன் சாமி கோயிலுக்கு வளரி ஆயுதம் நேர்த்திக்கடனாக வழங்குகின்றனர். கீரிப்பட்டி வங்காருத்தேவன் வளரி வீரர் என அழைக்கப்படுகிறார். எ.கோட்டைப்பட்டியில் வளரி ஆயுதத்துடன் நடுகல் உள்ளது.

இச்சிற்பம் குறித்து கிராம மக்கள் கூறியதாவது: இங்கு வாழ்ந்த இரண்டு இனக்குழு மக்களின் சண்டையின்போது உயிரிழந்த ஒரு வீரனின் சிலை என்றும், இன்றளவும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் எப்போதாவது வந்து வழிபடும் வழக்கம் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar