அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2022 05:06
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலும் , 108 திவ்ய தேசங்களில் நான்காவது திவ்யதேசமாகவும் , திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யபட்ட அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயிலில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் புதிய கொடிமரம் நேற்று (3ம் தேதி) காலை 6.30 அளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது , இதனை தொடர்ந்து இன்று (4ம் தேதி) காலை 07.00 - 08.00 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டது , அதனை தொடர்ந்து திருத்தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இன்று முதல் 11 நாட்கள் பிரமோத்ஸவம் நடைபெற உள்ளது , முக்கிய திருநாளான திருத்தேரோட்டம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.