Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திட்டமிட்டு களங்கம்: தீட்சிதர்கள் ... இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளலார் சர்வதேச மையம்: வடலுாரில் அமைச்சர்கள் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2022
06:06

வடலுார் : வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபை மற்றும் தரும சாலை ஆகியவற்றை நேற்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது.வடலுார் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று வேளாண் துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டேன்.தமிழக முதல்வர் ஆணைக்கேற்ப இந்த மையம் அமைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம். இங்கு மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து கலந்தாய்வு செய்தோம். சர்வதேச மையம் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 11 விண்ணப்பங்கள் வந்து, அதில் மூன்று பேர் தகுதியின்மையால் தள்ளுபடி செய்யப்பட்டு 8 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.அதில் ஒருவர் தானாக விலகிக் கொண்டார். அதிலும் 5 பேரின் வரைபடங்களை ஆய்வு செய்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இறுதி வரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, இம்மாத இறுதிக்குள் பணிகள் துவங்கப்பட உள்ளது.

சர்வதேச மையம் என்பது பெயருக்கு தகுந்தாற்போல் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் வசதிக்கேற்ப அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். முதல்வரின் கனவை நிறைவேற்றும் பணியில் ஹிந்து அறநிலையத்துறை தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உள்ளது.வரும் அக்டோபர் மாதம் வள்ளலார் 200ம் ஆண்டை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 5ம் தேதி முதல் இந்த ஆண்டு முழுவதும் 52 வாரங்கள் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. ஹிந்து அறநிலைத்துறை அதற்கான பணிகளை செய்ய உள்ளது.இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.,05) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பழனி; பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான  நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சப்தமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar