Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமெரிக்காவில் திருப்பதி சீனிவாசப் ... இன்று நம்மாழ்வார் அவதார தினம் இன்று நம்மாழ்வார் அவதார தினம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2022
08:06

சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகம் பெருவிழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவமும், விடையாற்றி பெருவிழாவும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகப் பெருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு,  சண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.  அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வைகாசி விசாகத்தையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.

முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர், முருகப்பெருமான், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு பால், தயிர், திருநீறு, திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar