Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷம் : போடி சிவன் கோயில்களில் ... வெள்ளகோவில் கல்யாண சுப்பிரமணியருக்கு வைகாசி விசாக சிறப்பு பூஜை வெள்ளகோவில் கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் கோயிலில் சிலைகள் சேதம் : பக்தர்கள் வேதனை, கோயில் நிர்வாகம் அலட்சியம்
எழுத்தின் அளவு:
மடப்புரம் கோயிலில் சிலைகள் சேதம் : பக்தர்கள் வேதனை, கோயில் நிர்வாகம் அலட்சியம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
02:06

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சேதமடைந்த சிலைகளை புதுப்பிக்காமல் இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயிலில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு வாரம்தோறும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு மற்றும் ஆடி வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், கடந்த 2017ல் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்காக அய்யனார் சன்னதியில் இருந்து அகற்றப்பட்ட சிலைகள் இடப்பற்றாகுறை என காரணம் காட்டி ஐந்து வருடங்களாக இருட்டறையில் வைத்து பூட்டியுள்ளனர். பத்ரகாளியம்மனின் இருபுறமும் உள்ள பெண் தெய்வச்சிலைகள் சேதமடைந்து இருப்பதால் அவற்றை சேலைகள் கொண்டு சேலையை வைத்து மூடி மறைத்துள்ளனர். அய்யனார் சன்னதி கோபுரத்தில் உள்ள சிலைகள் பலவும் சேதமடைந்து மூளியாக காட்சியளிப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். பொதுவாக இந்து கோயில்களில் சேதமடைந்த சிலைகளை அகற்றி விடுவது வழக்கம், ஆனால் புதுப்பிக்கப்பட்ட ஐந்தே வருடங்களில் சிலைகள் சேதமடைந்துள்ளதால் அவற்றை அகற்றினால் பிரச்சனை வரும் என கருதி அகற்றாமல் அப்படியே வைத்துள்ளனர். தினசரி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மூளியாக உள்ள சிலைகளை கண்டு வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அறநிலையத்துறை மடப்புரம் கோயில் சேதமடைந்த சிலைகளை அகற்றி புதிய சிலைகளை வைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar