கடலூர் : வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகாசி பெருவிழாவையொட்டி நடந்த தெப்ப உற்சவத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் . ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.