பதிவு செய்த நாள்
18
ஜூன்
2022
08:06
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில் மாலை, 4:30 மணிக்கு ேஹாமம், 5:00 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜையும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகப்பெருமானை வழிபாட்டனர்.கொண்டேகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவிலில், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் விநாயக பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சூளேஸ்வரன்பட்டி அழகாபுரி வீதி விஜயகணபதி கோவிலில், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில், விநாயகப்பெருமான், சுப்ரமணியர், அங்காள அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மஞ்சள் காப்பு அலங்காரத்தில் விநாயக பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தெப்பக்குளம் ராஜகணபதி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆனிமாதம் முதல் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் சுமங்கலி பாக்கியத்துக்கு, பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி நாளான நேற்று விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.