Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி கடலில் ... கண்டதேவி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்டம் கண்டதேவி அம்மன் கோயிலில் ஆனித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா: வாராஹிக்கு இனிப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா: வாராஹிக்கு இனிப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2022
10:06

தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி, வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரத்துடன் துவங்கியது.

தஞ்சை பெரிய கோவிலின் தெற்கு புறத்தில் மகா வாராஹி சன்னதி உள்ளது.  வாராஹி அம்மனை போர்களுக்கு செல்லும் போது மாமன்னன் ராஜராஜசோழன் வணங்கிச் சென்றதாக வரலாறு உண்டு. மிகவும் பழமையான வாராஹிக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்தாண்டு இன்று(28 ம் தேதி) காலை மகா கணபதி ஹோமம், அபிஷேகம், வாராஹி ஹோமம், ஆகியவை நடந்தது. முதல் நாளில், இனிப்பு அலங்காரத்துடன் விழா துவங்கியது. நாளை(29ம் தேதி) மஞ்சள் அலங்காரம்,  30ம் தேதி குங்குமம், ஜூலை 1ம் தேதி தேதி சந்தனம், 2ம் தேதி தேங்காய்ப்பூ, 3ம் தேதி மாதுளை, 4ம் தேதி நவதானியம், 5ம் தேதி வெண்ணெய், 6ம் தேதி கனி வகை, 7ம் தேதி காய்கறி, 8ம் தேதி புஷ்பம் என அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 8 முதல் 10 மணி வரை சிறப்பு வாராஹி ஹோமும், 10 முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேக, தீபாராதனையும், மாலை 6 மணி முதல் சிறப்பு அலங்காரமும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பஞ்சமி தினமான 3ம் தேதி காலை பஞ்சமி அபிஷேகம், மதியம் 12 மணிக்கு பஞ்சமி குழுவினரால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடக்கிறது. 8ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar