Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை ... ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் புதிய ராஜகோபுரம் கட்டிக் கொடுத்த நெல்லூர் நவயுக நிறுவன தலைவர் தரிசனம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பு இல்லாமல் உள்ள மசராய பெருமாள் கோவில்
எழுத்தின் அளவு:
பராமரிப்பு இல்லாமல் உள்ள மசராய பெருமாள் கோவில்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2022
10:06

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன் பாளையத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும், மசராய பெருமாள் கோவில் பராமரிப்பின்றி கிடக்கிறது.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகே பழமையான மசராய பெருமாள் கோவில் உள்ளது. ஓடு வேய்ந்த பழமையான இக்கோவில் பல்வேறு சிறப்புகளை பெற்றது. ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 18 கிராமங்கள் ஒன்றுகூடி இக்கோவிலில் திருவிழா எடுப்பது வழக்கம். மசராய பெருமாள் வெண்ணிற குதிரையில் எழுந்தருளி, பதினெட்டு கிராமங்களுக்கும் சென்று, இறுதியில் மசராய பெருமாள் கோவில் வளாகத்தை அடைவார். இந்த பதினெட்டு நாட்களும் நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் திருவிழா கோலம் பூண்டு இருக்கும். தற்போது, ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் போதுமான பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. கோவிலில் திருவிழா நடத்தி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பக்தர்கள் கூறுகையில், இக்கோவிலுக்கு தற்போது, 3.35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு பல கோடி ரூபாய் பெறும். ஆனால், கோயில் வளாகம் பராமரிப்பின்றி முட்செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கோயில் பராமரிப்பில்லாமல் கிடைக்கிறது என பக்தர்கள் புகார் எழுப்பியதால், ஹிந்து சமய அறநிலைத்துறை கோயிலின் முன்பு உள்ள முட்களை வெட்டி, புதர்களை அகற்றியது. கோயிலின் முன் பந்தல் போட்டு, ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்தது. அதோடு சரி, கோவிலை மீண்டும் கட்ட, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar