Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகூர் மூலநாதர் கோவிலில் ... ஆனி திருமஞ்சனம் : சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆனி திருமஞ்சனம் : சிவாலயங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு திருவிழா
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு திருவிழா

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2022
12:07

பேரூர்; பேரூரில், ஆனி நாற்று நடவு உற்சவ விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆனி உற்சவ நாற்று நடவு விழா, சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த, 26ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, பேரூர் தேவேந்திர குல வேளாளர் மடத்தில், நாற்று விடுதல் நிகழ்ச்சியுடன், ஆனி உற்சவ விழா துவங்கியது.


அனைத்து நாட்களும், மாலைதோறும் நெல்நாற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று மாலை 3:00 மணிக்கு, பட்டீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரத்துடன், அம்பாளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். மாலை, 4:00 மணிக்கு, மடத்திலிருந்து பொன்னேறு பூட்டி, பேரூர் கோவில் வாசல் நோக்கி ஊர்வலம் நடந்தது.சிவாச்சாரியார்கள் புண்யாகவாசனம் செய்து, புனித நீரை பொன்னேறுக்கு ஊற்றி ஏருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின், நாற்று நடவு மண்டபத்தில் உள்ள வயலில் ஏர் உழுது வணங்கினர். அதைத்தொடர்ந்து, சுவாமி திருமடத்துக்கு சென்று, நடப்பட்டிருந்த நாற்றுக்களை பொதுமக்கள் எடுத்து வந்தனர்.மாலை, 6:30 மணிக்கு பேரூர் கோவில் குருக்கள் வயலில் இறங்கி நாற்று நட்டார். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் வயலில் இறங்கி, குலவை சப்தமிட்டு நாற்று நட்டனர். பட்டீஸ்வரர் சுவாமி, அம்மாள் சமேதரராக திருவீதியுலா சென்றனர்.சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையுடன், நாற்று நடவு உற்சவ விழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar