Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... காக்கிநாடாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஷோபா யாத்திரை காக்கிநாடாவில் விஜயேந்திர சரஸ்வதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர அறநிலைத்துறை ஆணையாளர் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர அறநிலைத்துறை ஆணையாளர் சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2022
06:07

ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில அறநிலைத்துறை ஆணையாளர் ஹரி ஜவஹர்லால்  குடும்பத்தாரோடு இன்று சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு, கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர்.

கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.மேலும் கோயில் வேத பண்டிதர்களால் சிறப்பு ஆசிர்வாதம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியில் வந்த அறநிலையத்துறை ஆணையாளர் ஹரி ஜவஹர்லால் பேசுதையில் கோயிலில் மாஸ்டர் பிளான் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தற்போதுள்ள அறங்காவலர் குழு பதவி காலம் நிறைடைவதற்குள் பணிகளை தொடங்கி நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.  பின்னர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு ஹரி ஜவஹர்லாலிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார் . அந்த மனுவில் கோயிலில் வார இறுதியில் சமீப காலமாக நாகப்படகுகள் தட்டுப்பாடு ஏற்படுவதால் அதனை தயாரிக்கும் மையத்தில் "மின்ட்" யில் கூடுதல் ஊழியர்களை ஏற்பாடு செய்ய அனுமதி கோரினார்.அதேபோல் கோயிலுக்கு சொந்தமான "கோ" சாலையிலும் கூடுதல் ஊழியர்களை நியமிக்க அனுமதி கோரிக்கை விடுத்தார். அதற்கு அறநிலையத்துறை ஆணையாளர் அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இதனைத் தொடர்ந்து ஹரி ஜவஹர்லால் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபுவிடம் பேசுதையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் மீது சமீபத்தில் அதிக அளவில் விமர்சனங்கள் எழுந்த வன்னம் உள்ளதாகவும் இதனால் அரசுக்கு நல்ல பெயர் வராது என்றும் இனிமேல் இதுபோன்று நடக்காமல் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதே போல் கோயிலில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றும்  யாரேனும் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar