Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் ... வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம் வில்லியனூர் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகூர் மூலநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பாகூர் மூலநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2022
08:07

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.


இக்கோவில் இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.இக்கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வந்தது. 10ம் தேதி மூலநாதர், வேதாம்பிகை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று காலை 7.40 மணிக்கு நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., இந்து அறநிலைய துறை துணை ஆணையர் சிவசங்கரன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மாட வீதிகள் வழியாக தேரில் வலம் வந்து மூலநாதர், வேதாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலை 11.30 மணியளவில், முதல்வர் ரங்கசாமி கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு அறங்காவலர் குழு சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தியாகராஜன் உடனிருந்தார். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் முத்துராமன், துணை தலைவர் சக்திவேல், செயலாளர் காத்தவராயன், பொருளாளர் பிரபு மற்றும் கிராம மக்கள் செய்தனர்.இன்று முருகன், வள்ளி, தெய்வானை தெப்பல் உற்சவம், நாளை 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar