ராமநாதபுரம், : ராமநாதபுரம் வெளிபட்டணம் தாயுமானசுவாமி கோயில் தெரு ஸ்ரீதேவிகருமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, மகா கணபதி பூஜையுடன் புனிநீர் நிரம்பிய கும்பகலசங்கள் வைத்து யாகபூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் கார்மேகம், கவுன்சிலர் காளிதாஸ் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.