பதிவு செய்த நாள்
14
ஜூலை
2022
12:07
தென்தாமரைகுளம்: பொற்றையடியில் உள்ள சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் நேற்று குருபூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை யாகம், பாபாவிற்கு பச்சரிசிமாவு, பால், பன்னீர், இளநீர், தயிர், நெய், களபம், சந்தணம், மஞ்சள் பொடி ஆகிய ஒன்பது வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆனந்த சாய் பஜன்ஸ் நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர்கள் ராகுல், சாய்பிரேமி சவீதாசாய் ஆகியோரின் பக்தி இன்னிசை நடந்தது. பிறகு மாபெரும் மலர் அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து துளசி மலர்கள் வழங்கி சாய்பாபாவை தரிசனம் செய்தனர். மதியம் ஆரத்தியும், மலர் அலங்கார பல்லக்கு ஊர்வலமும் நடைபெற்றது. காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.