பதிவு செய்த நாள்
14
ஜூலை
2022
12:07
தென்காசி: தென்காசி, ஆய்க்குடி ரோடு, சாய்நகர் ஷீரடி சாய்பாபா கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு காலை ஆரத்தி, உலகநன்மைக்காக சிறப்பு ஹோமம், 11 மணிக்கு ‘ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்’ சிறப்பு சொற்பொழிவு, மதியம் 12 மணிக்கு ஆரத்தி, சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 4 மணிக்கு ஸ்ரீ சக்கரம் மகாமேரு சிறப்பு பூஜை, 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 6 மணிக்கு ஆரத்தி, இரவு 7மணிக்கு பல்லக்கு சேவை, இரவு 8மணிக்கு ஆரத்தி நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர், வக்கீல் ரவிசங்கர் மேற்பார்வையில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.