திருப்பரங்குன்றம் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2022 04:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. மூலவர் முன்பு யாக பூஜைகள் முடிந்து புனித நீர் மூலம் அனைத்து மூலவர்களுக்கும் அபிஷேகம், பூஜை, தீபாராதனைகள் நடந்தன. மூலவர் கல்கத்தா காளி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமானது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.