புதுச்சேரி : புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில், மாங்கனி திருவிழா நேற்று நடைபெற்றது.
அதனையொட்டி நேற்று காலை வேதபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி மற்றும் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. காரைக்கால் அம்மையார் மாங்கனி தேரில், கோவில் உள்புறப்பாடு மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு மாங்கனி பிரசாதம் வழங்கப்பட்டது.மாலை அருள் வளர்க்கும் அம்மை என்ற தலைப்பில் பேராசிரியர் சேதுபதி சொற்பொழிவு நிகழ்த்தினார்.விழா ஏற்பாடுகளை சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபையினர் செய்திருந்தனர்.