விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி காலை 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்நடந்தது. தொடர்ந்து மூலவர் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார்.ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.