பதிவு செய்த நாள்
14
ஜூலை
2022
05:07
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் தேரோட்ட விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில், ஆனி மாத பிரம் மோற்சவ விழா, இம்மாதம் 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, 12 நாட்கள் நடக்கும் விழாவில் காலை, மாலை என, பல்வேறு வாகனங்களில் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் எழுந்தருளி, வீதியுலா வருகிறார். கொரோனா பெரும் தொற்று காரணமாக, இரு ஆண்டுகளாக நடக்காமல் இருந்த தேரோட்டம், நேற்று கோலாகமாக கொண்டாடப்பட்டது.காலை 9:30 மணிக்கு, தேரடி வீதியில் அலங்கரிக்கப் பட்ட திருத்தேரில், ஸ்ரீதேவி பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.வழியில் அவரை வரவேற்ற திரளான பக்தர்கள், தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி எடுத்தும் சுவாமியை தரிசித்தனர். மதியம் 1:30 மணிக்கு, நிலையை தேர் அடைந்தது.