நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா பூஜைகள் நடந்தது.நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது. 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி, சிறப்பு யாகம் நடத்தி ஐயப்பனுக்கு சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலித்தார். பூஜைகளை முருகன் குருக்கள் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தலைவர் வைத்தியநாதன், செயலாளர் ராதா, பொருளாளர் பழனி, குருசாமிகள் ராஜேந்திரன், கமலக்கண்ணன், குமார், சிவகுருநாதன், தனசேகரன், முருகன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.