பதிவு செய்த நாள்
15
ஜூலை
2022
10:07
பல்லடம்: பல்லடம் அருகே, மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. பல்லடம் அடுத்த, பணிக்கம்பட்டி கிராமத்தில், மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு, தினசரி சிறப்பு வழிபாடுகள், அபிஷேக, ஆராதனைகள் உள்ளிட்டவை நடந்தன. நிறைவு விழாவை முன்னிட்டு, சுப்பிரமணியர் கலைக்குழுவின் சார்பில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. சிறுவர் சிறுமியர், பெண்கள் என, இருபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், கும்மியாட்டம் ஆடி பக்தர்களை மகிழ்வித்தனர். கும்மியாட்ட ஆசிரியர் சுந்தரம் பாடல்கள் பாடியபடி, கும்மியாட்டத்தை அரங்கேற்றினார். மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.