வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம் : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2022 09:07
காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடந்தது.
சாக்கோட்டையில் உள்ள வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனில் திருவிழா கடந்த ஜூலை 7ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரம் நடந்தது. நேற்று காலை வீரசேகர பிரியாவிடை உமயாம்பிகை தாயார், விநாயகர் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மாலை 4.50 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. விநாயகர் தேர் முதலில் வர தொடர்ந்து வீரசேகர பிரியாவிடை தேரும், உமையாம்பிகை தேரும் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாலை 5-50 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் நான்கு டி.எஸ்.பி.,க்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.