Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் மண்டல ... இரு தரப்பினரும் சமரசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாட்டுவண்டிகளில் குலதெய்வ கோவிலுக்கு சென்ற உறவினர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2022
05:07

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு பாரம்பரிய முறைப்படி பங்காளிகள் ஒன்று கூடி மாட்டு வண்டிகளில் பயணம் செய்து சாமி கும்பிடுவதால் குடும்பங்களில் பாசம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகள் சிலர் அங்கிருந்து தங்களது உறவினர்களை கூட்டிக்கொண்டு மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் உள்ள தங்களது குலதெய்வமான முத்தையா சுவாமி கோயிலுக்கு பாரம்பரிய முறைப்படி 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மானாமதுரை வழியாக நேற்று மாலை மேலப்பிடாவூர் கிராமத்திற்கு சென்றனர். அவர்கள் செல்லும்போது அவர்களுடன் தங்களது குலதெய்வ கோயிலுக்கு நேர்த்திக்கடனுக்காக வாங்கிய மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.மானாமதுரை நகருக்குள் ஏராளமான மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி கோயிலுக்கு ஏராளமானோர் நடந்து செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.இது குறித்து ஒக்கூர் புதூரை சேர்ந்த கார்த்திக்24, என்பவர் கூறுகையில், சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த நாங்கள் எங்களது உறவினர்களோடு 4வருடங்களுக்கு ஒரு முறை மாட்டு வண்டிகளில் மேலப்பிடாவூரில் உள்ள எங்களது குலதெய்வமான முத்தையா சாமி கோயிலுக்கு சென்று ஆடு,மாடுகளை நேர்த்திக்கடனாக விடுவது வழக்கம்.மேலும் அங்கு தங்கியிருந்து ஆடு,கோழிகளை பலியிட்டு உறவினர்களோடு சேர்ந்து ஒன்றாக சமைத்து சாப்பிட்டு வருவது வழக்கம். ஒக்கூர் புதூரில் இருந்து உறவினர்களும்,பங்காளிகளும் ஒன்றாக சேர்ந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் வருவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனால் எங்களது உறவினர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி குடும்ப பாசமும் அதிகரித்து வருகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சென்னை: திருமலை, திருப்பதிவெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
கிளார்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் ... மேலும்
 
temple news
அவிநாசி; சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜ பெருமான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar