Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2 ... தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2022
05:07

பெரம்பலுார் : -அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலில், ஆடித் திருவாதிரை உற்சவம் துவக்க விழா, கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நேற்று நடந்தது.

விழாவை துவக்கி வைத்து, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் மகன் ராசேந்திரன் சோழன் ஆட்சிக் காலத்தில், கப்பல் படை மூலம் கடல் கடந்து போரிட்டு, தென்கிழக்கு ஆசியா முழுதும் சோழப் பேரரசை விரிவுபடுத்தினார்.நிர்வாகச் சீர்திருத்தத்திலும் சிறந்து விளங்கிய ராசேந்திர சோழன், கங்கை வெற்றியைக் கொண்டாடும் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரத்தில், பிரமாண்டமான பெருவுடையார் கோவிலை கட்டினார்.நாட்டிலேயே மிகப் பெரிய ஏரியை உருவாக்கி, சோழகங்கம் எனப் பெயரிட்டார். அதுவே, தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

கொள்ளிடத்தில் இருந்து கால்வாய் அமைத்து, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடத்தையும் உருவாக்கியுள்ளார். இவரது ஆட்சிக் காலத்தில், அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்த நீர் மேலாண்மை நம்மை வியக்க வைக்கிறது.ஆடி திருவாதிரை நட்சத்திரத்தன்று, பல்வேறு சிறப்புகளுடைய ராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இந்த விழா, இரண்டு நாட்கள் நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரித்த ராசேந்திர சோழனின் வரலாறு குறுந்தகடு வெளியிட்டார்.முன்னதாக, பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.விழாவில் பரத நாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், மாணவ -- மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar