Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2 ... தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2022
05:07

பெரம்பலுார் : -அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலில், ஆடித் திருவாதிரை உற்சவம் துவக்க விழா, கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நேற்று நடந்தது.

விழாவை துவக்கி வைத்து, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் மகன் ராசேந்திரன் சோழன் ஆட்சிக் காலத்தில், கப்பல் படை மூலம் கடல் கடந்து போரிட்டு, தென்கிழக்கு ஆசியா முழுதும் சோழப் பேரரசை விரிவுபடுத்தினார்.நிர்வாகச் சீர்திருத்தத்திலும் சிறந்து விளங்கிய ராசேந்திர சோழன், கங்கை வெற்றியைக் கொண்டாடும் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரத்தில், பிரமாண்டமான பெருவுடையார் கோவிலை கட்டினார்.நாட்டிலேயே மிகப் பெரிய ஏரியை உருவாக்கி, சோழகங்கம் எனப் பெயரிட்டார். அதுவே, தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

கொள்ளிடத்தில் இருந்து கால்வாய் அமைத்து, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடத்தையும் உருவாக்கியுள்ளார். இவரது ஆட்சிக் காலத்தில், அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்த நீர் மேலாண்மை நம்மை வியக்க வைக்கிறது.ஆடி திருவாதிரை நட்சத்திரத்தன்று, பல்வேறு சிறப்புகளுடைய ராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இந்த விழா, இரண்டு நாட்கள் நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரித்த ராசேந்திர சோழனின் வரலாறு குறுந்தகடு வெளியிட்டார்.முன்னதாக, பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.விழாவில் பரத நாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், மாணவ -- மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar