Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றத்தில் பிரதோஷ பூஜை புனித அன்னாள் சுவக்கின் ஆலய விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமாவாசைக்காக குவியும் பக்தர்கள் : தயார் நிலையில் அரசுத்துறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2022
05:07

நாளை ஜூலை 28 ஆடி அமாவாசையை முன்னிட்டு தாணிப்பாறை மலையடிவார தோப்புகளில் பக்தர்கள் குவியத் துவங்கி உள்ளனர். அறநிலையத்துறை சார்பில் மலை அடிவாரத்தில் இருந்து கோயில் வரை பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் இடைவிடாது அன்னதானம் வழங்கப்படுகிறது. மலையடிவாரத்தில் தனியார் மடங்களின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. வனத்துறை சார்பில் நீர்வரத்து ஓடைகள், அபாயகரமான பகுதிகளில் வனக்குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறை சார்பில் நவீன கருவிகள், மீட்பு சாதனங்களுடன் நான்கு பேர் கொண்ட குழுவினர், சுமார் 30 இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒன்பது தீயணைப்பு வாகனங்கள், மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளது. மருத்துவத்துறை சார்பில் தாணிப்பாறை அடிவாரத்தில் உயிர்காக்கும் மருத்துவ கருவிகளுடன் ஒரு மினி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 11 டாக்டர்கள் கொண்ட மூன்று குழுவினர், 24 மணி நேரமும் பணியமத்தப்பட்டுள்ளனர். ஒரு நடமாடும் மருத்துவ வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும், மதுரையில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக 5 இடங்களில் பார்க்கிங் வசதியும், அரசு பஸ்சிற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன்கோவில் வழியாக வரும் வாகனங்கள் வத்திராயிருப்பு, சேது நாராயணபுரம் விலக்கு வழியாக நான்காவது பார்க்கிங் இடம் வழியாக சென்று, சிவசங்கு மடம் மகாராஜபுரம் ரோடு வழியாக வெளியில் செல்ல வேண்டும். அழகாபுரி வழியாக வரும் வாகனங்கள் தாணிப்பாறை விலக்கு வழியாக பார்க்கிங் இடங்களுக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வரை அரசு பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை டி.ஐ.ஜி., மதுரை, விருதுநகர் எஸ்.பிக்களும், பிற அரசு துறை தலைமை அதிகாரிகளும் தங்களது துறை சார்ந்த பணிகளை ஆய்வு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar