வரலட்சுமி பூஜை, ஆடி வெள்ளி : பத்மாவதி தாயாருக்கு 50001வளையல் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2022 04:08
போடி: ஆடி வெள்ளி, வரலட்சுமி பூஜையை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பத்மாவதி தயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 50001வளையல் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
* போடி தாய்ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயில், போடி அருகே ரங்கநாதபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன், போடி எஸ்.எஸ்.புரம் சேனைத்தலைவர் மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட தங்க முத்து மாரியம்மன் கோயில், திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தது. அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.