சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2022 03:08
புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில்,நாளை (11ம் தேதி), ரிக் மற்றும் யஜூர் வேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்த சுவாமி கோவிலில்,நாளை (11ம் தேதி), வியாழக்கிழமை ரிக் மற்றும் யஜூர் வேதத்தை சேர்ந்தவர்களுக்கு பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.நாளைவிடியற்காலை 5:00 மணிக்கு துவங்கி, பகல் 12:00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை,குழுக்களாக பூணுால் அணிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி பிராமண சங்கம், ஸ்ரீசாய் சங்கர பக்த சபா சார்பில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மேலும் விபரங்களுக்கு, 98423 29770, 98423 27791 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.