ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் மேற்கு, கிழக்கு தெரு, மாயாண்டிபட்டி, ஊரணிப்பட்டி உட்பட பல்வேறு ஊர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் முளைப்பாரி திருவிழா சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 4:30 மணிக்கு அந்தந்த தெருவில் இருந்து ஏராளமான பக்தர்கள், தேசியக்கொடியுடன் கூடிய முளைப்பாரிகளை எடுத்து பெரிய மாரியம்மன் கோவில் வந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு, பைபாஸ் ரோடு வழியாக பட்டத்தரசி அம்மன் கோவில் சென்றடைந்தனர். அங்கு அம்மனை தரிசித்த பிறகு முளைப்பாரிகளை நீர்நிலைகளில் கரைத்தனர். ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.