வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான் பாண்டி முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் மணிகண்ட சுவாமி தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். திருப்பணி குழு தலைவர் முருகன், பூஜாரி கேசவன், மறத்தமிழர் சேனை மாநிலத் துணை பொதுச் செயலாளர் ஆதி முத்துக்குமார், கிராமமக்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.