இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நாளை ஆடிப்பெருந்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2022 11:08
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நாளை (ஆக., 12) ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா நடைபெற உள்ளது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் தை ஆடி மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமை பெருந்திருவிழா நடைபெறும். ஆகஸ்ட் 5 கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நாளை (ஆக., 12) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. தென் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு பூசாரிகள் செய்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு சாத்தூர், விருதுநகர் அருப்புக்கோட்டை சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இருக்கன்குடி கோயிலுக்கு இயக்கப்படுகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.