மாதனம் முத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2022 12:08
மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே மாதனம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாதானம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு துண்டு துண்டாக வெட்டப்பட்ட புளிய மரம் திரும்பவும் துளுர்விட்டு மரமானதால் அங்கு முத்து மாரியம்மன் தோன்றியதாக ஐதிகம். இந்த முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோரும் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமை தீமிதி திருவிழா நடைபெருவது வழக்கம் இவ்வாண்டு கடந்த 3ம் தேதி கொடி ஏற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது.10 ம் நாளான நேற்று தீமிதி திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. காப்பு கட்டி கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். அப்பொழுது அங்கு எழுந்தருளிய முத்து மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த தீமிதி திருவிழாவிற்க்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சீர்காழி டிஎஸ்பி பழனிச்சாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் நடராஜன் செய்திருந்தார்.