சிலகோயில்களில் மட்டும் ஆண்களை சட்டையோடு அனுமதிப்பதில்லையே ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2012 05:08
அந்தச் சில கோயில்களில் தான், நம் கலாச்சாரம் ஓரளவாவது காப்பாற்றப்பட்டு வருகிறது. கோயிலும் தெய்வங்களும் பாரம்பரியமானவை. இவ்விஷயத்தை மதித்துத்தான், நாம் கோயில்களுக்குச் செல்கிறோம். தெய்வத்தின் மீதுள்ள மதிப்பை வெளிப்படுத்த நாமும் பாரம்பரிய உடையில் செல்வது அவசியம். திருமணத்திற்கு இரவல் வாங்கியாவது பட்டுப்புடவையும், நகைகளும் அணிந்து செல்வதில்லையா? அதுபோல கோயிலுக்குச் செல்லும்போது பக்தி அவசியம். பக்திக்கு பாரம்பரியத்தைப் போற்றும் பண்பும் அவசியம். எனவே, கலாச்சாரத்தை நாமாகவே முன்வந்து, எல்லா கோயில்களிலும் பின்பற்றுவோமே!